பிரார்த்தனை
படைத்த
இரட்சகனை படைப்பினங்கள் நெருங்குவதற்குண்டான ஒரு வழிமுறை!தன் தேவைகளை
தன்னைப் படைத்த ஏக இறைவனிடமே படைப்பினங்கள் கேட்டு பெறும் கண்ணியமிக்க
வாழ்வியல் முறை!
தவறுகளிலும் பாவங்களிலும் தடுமாறி
விழும் மனித இனம் தன்னைப் பரிசுத்தப்படுத்திக் கொள்ள இறைவனால்
அருளப்பட்டிருக்கும் இலகுவான வணக்க முறையே பிரார்த்தனை என்பது. பிரார்த்தனை
என்றதும் மனம் போன போக்கில் மன்றாடுவதும் புலம்புவதுமல்ல: அதற்கென்று
கண்ணியமிக்க வழி முறையையும் வார்த்தைகளையும் அல்லாஹ்வின் மார்க்கம் நமக்கு
சொல்லித் தருகிறது.
மனிதர்களின் எண்ணங்களையும்
நோக்கங்களையும் மார்க்கம் முறைப்படுத்துகிறது. சொற்ப பலா பலன்களுக்கு
மனிதர்கள் தங்கள் வாழ்வை சொதப்பி விடாமல் நிரந்தர நன்மைகளுக்கு மனிதனை
சிந்தனை ரீதியாக, உளரீதியாக சித்தப்பட செய்கிறது.
படைப்பினங்களால் கேட்கப்படுபவனும்
அவைகளுக்கு கொடுப்பவனும் எவ்வித சுயதேவைகளற்றவனாகவும் சர்வ வல்லமை
பெற்றவனாகவும் எதிர்கால ஞானம் நிறைந்தவனாகவும் இருக்க வேண்டுமென இஸ்லாம்
அறிவுறுத்துகிறது.
அத்தகைய வல்லமையும் ஆற்றலும் தன்
ஒருவனுக்கு மட்டுமே இருப்பதை அல்லாஹ் உணர்த்துகிறான். மரித்து போனபின்
பிண்டங்களுக்கும், கல்லுக்கும் மண்ணுக்கும் தன்னைப் போன்றே தேவைகள்
இருக்கக் கூடிய சக மனிதனுக்கும் பிறர் கேட்பதை நிறைவேற்றித் தரும் ஆற்றல்
இல்லை. அவைகளுக்குக் கேட்கும் திறனுமில்லை. அவைகளிடம் கேட்பது கொடும்
பாவமும் நஷ்டமுமாகும் என மார்க்கம் எச்சரிக்கிறது...
அல்லாஹ்விடம் மட்டுமே பிரார்த்திக்க
வேண்டுமெனமும் தன்னிடம் மட்டுமே கேட்பதை அல்லாஹ் விரும்புவதாகவும் ஆகவே துஆ
ஒரு வணக்கமாகும் என்பதையும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது.
மனிதனின் தேவைகள் மறுமையை
அடிப்படையாகக் கொண்டதாகவும் அதற்கான அனுகூலங்கள் இம்மையில் நிறைந்ததாக
இருக்க இறைவனிடம் பிரார்த்திக்குமாறு இறைமார்க்கம் கற்றுத்
தருகிறது. நோக்கங்கள் உயர்வானதாக வழிமுறைகள் தூய்மையானதாக இருந்திட
வல்லோனின் மார்க்கம் வலியுறுத்துகிறது. அப்போதுதான் மனக்குழப்பங்களும் மனித
தொல்லைகளும் மறுமையை நோக்கிய பயணத்திற்கு இடந்தராது.இதயம் தெளிவாகும்.
எல்லாப்பிரச்னைகளும் லேசாகும். இஹ்லாஸ் என்ற தூய்மையான பந்தம் இறைபக்தியில்
ஏற்பட்டு வலுவாகும். அதுவே இன்ஷாஅல்லாஹ் இம்மை மறுமை வெற்றி களுக்கு
வழிகோலும். அதற்கான முதல் ஆதாரங்களாக மகத்தான இரட்சகன் அல்லாஹ் அருளிய
திருக்குர்ஆனில் இருந்து பிரார்த்தனைகளை சமுதாயத்தின் கவனத்துக்குக்
தருகிறோம்.
إيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ
نَسْتَعِينُ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ
أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
(இறைவா) உன்னையே நாங்கள்
வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம். நீ எங்களை நேர்வழியில்
நடத்துவாயாக! (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன்
கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல (அல்குர்ஆன்: 1:
5-7)
எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து
(இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக! நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும்
அறிபவனாகவும் இருக்கின்றாய். எங்களை மன்னிப்பாயாக! நீயே நிச்சயமாக மிக்க
மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய் (அல்குர்ஆன்: 2:
127-128).
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
ரப்பனா! எங்களுக்கு இவ்வுலகில்
நற்பாக்கியங்களைத் தந்தருள்வாயாக! மறுமையிலும் நற்பாக்கியங்களைத்
தந்தருள்வாயாக! இன்னும் எங்களை (நரக) நெருப்பின் வேதனையிலிருந்தும்
காத்தருள்வாயாக! (அல்குர்ஆன்: 2:201)
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِين
எங்கள் இறiவா! எங்களுக்கு
பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாக்குவாயாய! காஃபிரான
இம்மக்கள் மீது (நாங்கள் வெற்றியடைய) உதவி செய்வாக! (அல்குர்ஆன்: 2:250)
سَمِعْنَا وَأَطَعْنَاغُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ
எங்கள் இறைவனே! (உன் வசனங்களை)
செவிமடுத்தோம். (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிபட்டோம்.எங்கள் இறைவனே!
உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்.மீளுவதும் உன்னிடமே தான் (அல்குர்ஆன்
2:295)
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن
نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا
كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا
تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا
وَارْحَمْنَاأَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
எங்கள் இறiவா! நாங்கள் மறந்து
போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம்
பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது
சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா!
எங்கள் எங்கள் சக்திக்காப்பாற்ப்பட்ட சுமையை எங்கள் மீது
சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை
மன்னித்தருள்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்.
காஃபிரான கூட்டத்தாரின் மீது எங்களுக்கு உதவி செய்வாயாக! (அல்குர்ஆன்:
2:286)
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
' எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு
நேர்வழி காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து
விடாதே!இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு நல்லருள் அளிப்பாயாக!
நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்!(அல்குர்ஆன்: 3:8)
رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ
'எங்கள் இறைவனே! நிச்சயமாக
நாங்கள் (உன் மீது) நம்பிக்கைகொண்டோம்; எங்களுக்கர்க எங்கள பாவங்களை
மன்னித்தருள்செய்வாயாக! (நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக்
காப்பாற்றுவாயாக! 3:16
اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ
تُؤْتِي الْمُلْكَ مَن تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّن تَشَاءُ
وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُبِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ
عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அல்லாஹ்வே! ஆட்சிகளுக்கெல்லாம்
அதிபதியே! நீ யாரை விரும்புகிறாயோ அவருக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய்;
இன்னும் ஆட்சியை நீ விரும்புவோரிடமிருந்து அகற்றியும் விடுகிறாய்; நீ
நாடியோரை கண்ணியப்படுத்துகிறாய்; நீ நாடியவரை இழிவு படுத்தவும் செய்கிறாய்;
நன்மைகள் யாவும் உன் கைவசமேயுள்ளன அனைத்துப்பொருட்கள் மீதும் நிச்சயமாக நீ
ஆற்றலுடையவனாக இருக்கின்றாய். 3:26
رَبِّ هَبْ لِي مِن لَّدُنكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ
இறைவனே! உன்னிடமிருந்து எனக்காக
ஒரு பரிசுத்தமான சந்ததியைக் கொடுத்தருள்வாயாக! நிச்சயமாக நீ
பிரார்த்தனையைச் செவிமடுத்தருள்வோனாக இருக்கின்றாய். 3:38
رَبَّنَا آمَنَّا بِمَا أَنزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
எங்கள் இறைவனே! நீ அருளிய
(வேதத்)தை நாங்கள் நம்புகிறோம், (உன்னுடைய) இத்தூதரை நாங்கள்
பின்பற்றுகிறோம்; எனவே எங்களை (சத்தியத்திற்கு) சாட்சி சொல்வோருடன்
சேர்த்து எழுதுவாயாக!' 3:53
رَبَّنَا اغْفِرْ لَنَا
ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا
وَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
'எங்கள் இறைவனே! எங்கள்
பாவங்களையும் எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறிச் செய்தவற்றையும்
மன்னித் தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதியாய் இருக்கச் செய்வாயாக!
காஃபிர்களின் கூட்டத்தாருக்கு எதிராக எங்களுக்கு நீ உதவி புரிவாயாக'. 3:147
رَبَّنَا مَا خَلَقْتَ هَٰذَا
بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن
تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ
رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلْإِيمَانِ أَنْ
آمِنُوا بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا
وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الْأَبْرَارِ رَبَّنَا
وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَىٰ رُسُلِكَ وَلَا تُخْزِنَا يَوْمَ
الْقِيَامَةِ إِنَّكَ لَا تُخْلِفُ الْمِيعَادَ
'எங்கள்
இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை; நீ மகா தூய்மையானவன்;
(நரக) நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காத்தருள்வாயாக!'. 'எங்கள்
இறைவனே! நீ எவரை நரக நெருப்பில் புகுத்துகின்றாயோ அவரை நிச்சயமாக நீ
இழிவாக்கிவிட்டாய்; மேலும் அக்கிரமக்காரர்களுக்கு உதவி செய்வோர்
எவருமிலர்!'. 'எங்கள் இறைவனே! உங்கள் இறைவன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்
என்று ஈமானின் பக்கம் அழைத்தவரின் அழைப்பைச் செவிமடுத்து நாங்கள் திடமாக
ஈமான் கொண்டோம்; எங்கள் இறைவனே! எங்களுக்கு, எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக!
எங்கள் தீமைகளை எங்களை விட்டும் அகற்றி விடுவாயாக் இன்னும், எங்க(ளுடைய
ஆன்மாக்க)ளைச் சான்றோர்களு(டைய ஆன்மாக்களு)டன் கைப்பற்றுவாயாக!'. 'எங்கள்
இறைவனே!இன்னும் உன் தூதர்கள் மூலமாக எங்களுக்கு நீ வாக்களித்ததை
எங்களுக்குதஷ தந்தருள்வாயாக! கியாம நாளில் எங்களை இழிவுபடுத்தாது
இருப்பாயாக! நிச்சயமாக நீ வாக்குறுதிகளில் மாறுபவன் அல்ல. 3:191-194
رَبَّنَا آمَنَّا فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ
'எங்கள் இறைவனே! நாங்கள்
(இவ் வேதத்தின் மீது) நம்பிக்கை கொண்டோம்; எனவே, (இவ்வேதம் சத்தியமானது
என்று,) சாட்சி சொல்வோருடன் எங்களையும் நீ பதிவு செய்து கொள்வாயாக!' 5:83
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
'எங்கள் இறைவனே! எங்களுக்கு
நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் - நீ எங்களை மன்னித்துக் கிருபை
செய்யாவிட்டால்,நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'. 7:23
رَبَّنَا افْتَحْ بَيْنَنَا وَبَيْنَ قَوْمِنَا بِالْحَقِّ وَأَنتَ خَيْرُ الْفَاتِحِينَ
எங்கள் இறைவா! எங்களுக்கும்,
எங்கள் கூட்டத்தாருக்குமிடையே நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக -
தீர்ப்பளிப்பவர்களில் நீயே மிகவும் மேலானவன்'. 7:89
رَبَّنَا أَفْرِغْ عَلَيْنَا صَبْرًا وَتَوَفَّنَا مُسْلِمِينَ
'எங்கள் இறைவனே! எங்கள் மீது
பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக் முஸ்லிம்களாக (உனக்கு முற்றிலும்
வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி) எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக்
கொள்வாயாக!' 7:126
لَئِن لَّمْ يَرْحَمْنَا رَبُّنَا وَيَغْفِرْ لَنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
எங்கள் இறைவன் எங்களுக்குக் கிருபை செய்து எங்களை மன்னிக்கா விட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்'. 7:149
وَاكْتُبْ لَنَا فِي هَٰذِهِ الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ
இவ்வுலகத்திலும், மறுமையிலும் எங்களுக்கு (அழகிய) நன்மைகளையே விதித்தருள்வாயாக! நிச்சயமாக நாங்கள் உன்னையே முன்னோக்குகிறோம்' 7:156
حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ
எனக்கு அல்லாஹ்வே போதுமானவன்.
(வழிபடுவதற்குரிய) நாயன் அவனையன்றி (வேறுயாரும்) இல்லை; அவன் மீதே நான்
பரிபூரண நம்பிக்கை கொண்டுள்ளேன் - அவன் தான் மகத்தான அரியாசனத்தின்
(அர்ஷின்) அதிபதி' 9:129
عَلَى اللَّهِ تَوَكَّلْنَا رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلْقَوْمِ الظَّالِمِينَ
நாங்கள் அல்லாஹ்வையே பூரணமாக
நம்பி (அவனிடமே எங்கள் காரியங்களை ஒப்படைத்து)க் கொண்டோம். எங்கள் இறைவனே!
அநியாயம் செய்யும் மக்களின் சோதனைக்கு எங்களைஆளாக்கிவிடாதே! 10:85
وَنَجِّنَا بِرَحْمَتِكَ مِنَ الْقَوْمِ الْكَافِرِينَ
(எங்கள் இறைவனே!) இந்த காஃபிர்களான மக்களிடமிருந்து உன் அருளினால் எங்களை நீ காப்பாற்றுவாயாக!' 10:86
